சமூக விதிகளைப் பின்பற்றி கோவை பள்ளிகள் திறப்பு: ஆசிரியர்கள், மாணவிகள் மகிழ்ச்சி!

கோவை: சமூக விதிகளைப் பின்பற்றி கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மகிழ்ச்சியில் திளைப்பதாகக் கூறினர்.



கோவை: சமூக விதிகளைப் பின்பற்றி கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மகிழ்ச்சியில் திளைப்பதாகக் கூறினர்.



கோவையில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு காலை 7.30 மணியில் இருந்தே மாணவிகளும், ஆசிரியர்களும் வரத்தொடங்கினர். மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 653 பள்ளிகள் திறக்கப்பட்டன. 86 ஆயிரம் மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்தார். மேலும் 25 பறக்கும்படை அமைப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளின் செயல்பாடு மற்றும் மாணவர்களைக் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.



வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு காலை 8 மணியிலிருந்து ஆசிரியர்களும் மாணவிகளும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். பள்ளியில் சமூக இடைவெளியைப் பின்பற்றும்விதமாக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டங்கள் வாயிலாக சமூக விதிகளைப் பின்பற்றி மாணவிகள் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.



சானிடைசர், முக கவசம் அணிவது குறித்து ஆசிரியர்கள் உறுதி செய்த பின்பே மாணவிகளும், ஆசிரியர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.



மேலும் வகுப்புக்கு 25 பேர் வீதம் 30-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.



பள்ளிகள் திறப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வகுப்புகள் எடுப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.



பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாடம் கற்க ஆவலுடன் இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....