கோவை: கோவை ராமநாதபுரத்தில் இறந்தவரின் ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கோவை: கோவை ராமநாதபுரத்தில் இறந்தவரின் ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கோவை ராமநாதபுரம் பி.ஆர்.நகரில் வசித்து வந்தவர் நாராயணசாமி (வயது 80). இவருக்கு உடல் நிலை பாதித்ததால் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் இறந்து விட்டார். இதனால் இவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை பொருட்கள் வாங்கி வந்த தனலட்சுமிபுரம் ரேஷன் கடைக்குச் சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தந்தை இறந்து விட்டார். எனவே தனது தந்தையின் பெயரில் உள்ள ரேஷன் கார்டுக்கு பொருட்கள், பொங்கல் பரிசு வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் தனது தந்தை பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டை சரண்டர் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசான ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவை நாராயணசாமி பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக அவர் பயன்படுத்திவந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக்கண்ட ராஜசேகரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஆன்லைன் மூலம் தமிழக வழங்கல் துறைக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உத்தரவின்பேரில் வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் பெயரில் உள்ள ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி, சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து இணைப்பதிவாளர் பழனிசாமி கூறுகையில், "இறந்தவரின் பெயரில் உள்ள ஸ்மார்ட் கார்டுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் தனலட்சுமிபுரம் ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்தக் கடையில் வேறுஏதும் முறைகேடுகள் நடைபெற்று ள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார்.
கோவை ராமநாதபுரம் பி.ஆர்.நகரில் வசித்து வந்தவர் நாராயணசாமி (வயது 80). இவருக்கு உடல் நிலை பாதித்ததால் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் இறந்து விட்டார். இதனால் இவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை பொருட்கள் வாங்கி வந்த தனலட்சுமிபுரம் ரேஷன் கடைக்குச் சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தந்தை இறந்து விட்டார். எனவே தனது தந்தையின் பெயரில் உள்ள ரேஷன் கார்டுக்கு பொருட்கள், பொங்கல் பரிசு வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் தனது தந்தை பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டை சரண்டர் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசான ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவை நாராயணசாமி பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக அவர் பயன்படுத்திவந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக்கண்ட ராஜசேகரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஆன்லைன் மூலம் தமிழக வழங்கல் துறைக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உத்தரவின்பேரில் வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் பெயரில் உள்ள ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி, சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து இணைப்பதிவாளர் பழனிசாமி கூறுகையில், "இறந்தவரின் பெயரில் உள்ள ஸ்மார்ட் கார்டுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் தனலட்சுமிபுரம் ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்தக் கடையில் வேறுஏதும் முறைகேடுகள் நடைபெற்று ள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார்.