வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது!

கோவை: வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒடிசா வாலிபரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


கோவை: வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒடிசா வாலிபரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஒடிசாவைச் சேர்ந்தவர் தம்புரா ராவத் (வயது 22). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இவர் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போது படகுத்துறை அருகே சோதனை செய்தபோது பைக்கில் நின்று கொண்டிருந்த அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் செல்போன் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது செல்போன் வாட்ஸ்அப்பைப் பார்த்தபோது பலருக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல் தெரிவித்து கஞ்சா பொட்டலங்களை அவர்கள் கேட்கும் இடத்திலேயே கொண்டு சென்று டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...