கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பகுதியில் தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பகுதியில் தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதி பொள்ளாச்சியில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது குடும்பங்களுடன் டாப்ஸ்லிப் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் டாப்சிலிப் வனப்பகுதியில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள வனத்துறை விடுதிகளில் முன்பதிவு செய்து, அங்கு தங்குவது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்த பனிப்பொழிவு நீண்டு உள்ளதால், பொங்கல் தொடர் விடுமுறைக்கு டாப்சிலிப் சென்ற சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதி பொள்ளாச்சியில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது குடும்பங்களுடன் டாப்ஸ்லிப் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் டாப்சிலிப் வனப்பகுதியில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள வனத்துறை விடுதிகளில் முன்பதிவு செய்து, அங்கு தங்குவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்த பனிப்பொழிவு நீண்டு உள்ளதால், பொங்கல் தொடர் விடுமுறைக்கு டாப்சிலிப் சென்ற சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.