பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி கோவையில் சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி கோவையில் சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்.



 கோவை: பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு 5 செண்ட் இடம் வழங்கக்கோரி, சமூக நீதி கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

பஞ்சமி நிலங்களை மீட்க சட்டம் இயற்றக்கோரியும், நிலமில்லாத மக்களுக்கு 5 செண்ட் நிலம் வழங்கக்கோரியும் கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், பஞ்சமி நிலங்களை மீட்டு விவசாயம் செய்வதற்குஒரு ஏக்கர் நிலம் வழங்கவும் வேண்டுகோள் விடுத்தனர்.



தமிழகம் முழுவதும் 11.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன எனவும் இதில் கோவை வடக்கு வட்டாட்சியருக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 1200 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளதாகவும், அதில் மற்ற சமூகத்தினர் 30% , பட்டியலின மக்களின் பெயரில் மாற்று சாதியினர் மறை முகமாக 70% நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர், என குற்றம் சாட்டினர்.



இது குறித்து பேசிய, சமூக நீதி கட்சியை சேர்ந்த பன்னீர்செல்வம்,"செங்கல் சூளைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியார்கள் என இந்த பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலங்களை மீட்டுத்தர ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை", என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...