பொள்ளாச்சியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: 127 பானைகளில் பெண்கள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!

கோவை: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில், அ.தி.மு.க. மாணவரணி சார்பில், 127 பானைகளில் பெண்கள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.


கோவை: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில், அ.தி.மு.க. மாணவரணி சார்பில், 127 பானைகளில் பெண்கள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 104-வது பிறந்தநாள் விழாவை அக்கட்சியினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி 18-வது வார்டில் கோவை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் அப்பகுதியிலுள்ள இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், பெண்கள் கலந்து கொண்டு சாதி, மத, பேதங்களைக் கடந்து ஒருங்கிணைந்து 127 பானைகளில் சமத்துவப் பொங்கல் வைத்தனர்.



விழாவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதற்கானஏற்பாடுகளை கோவை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணிச் செயலாளர் ஜெயம் ராஜா செய்திருந்தார். 127 புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்துக்கு படையலிட்டு வணங்கினர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....