போலியாக கையெழுத்து போட்டு வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 4 லட்சம் மோசடி. ஒடிசா வாலிபர் கைது!

கோவை: கோவையில் போலியான கையெழுத்துப் போட்டு வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 3.76 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் போலியான கையெழுத்துப் போட்டு வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 3.76 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஹிமான்சு குமார் மோபத்ரா (வயது 49). இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டிலுள்ள கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அதே வங்கியில் ஒரு பெண் கணக்கு வைத்துள்ளார். இவர் அந்தப் பெண்ணின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கியில் அவரது உறவினர் எனக் கூறி அந்தப் பெண்ணின் பெயரில் காசோலை வாங்கியுள்ளார். அதன்பிறகு அந்தப் பெண்ணின் கையெழுத்து போல கையெழுத்து போட்டு வங்கியில் 3.76 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். வங்கியில் வித் ட்ராவல் செக் மூலமாக பணம் எடுக்கும்போது பணம் எடுக்கக்கூடிய நபரே வரவேண்டும் என்று கூறுவது வழக்கம். ஆனால் செக் மூலம் பணம் எடுக்கும்போது அதே நபர் வர வேண்டிய அவசியம் கிடையாது.

அக்கௌன்ட் பே இல்லாமல் தன்னுடைய பெயரை பதிவு செய்து நேரடியாக அந்தப்பெண் வழங்கியதுபோல வங்கியில் போலி கையெழுத்திட்டு பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வங்கிக் கணக்கில் மினி ஸ்டேட்மென்ட் எடுத்துப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் ஒடிசா மாநில வாலிபர் ஹிமான்சு குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நூதன முறையில் அந்தப்பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து காசோலை மூலமாக பணம் எடுத்தது தெரிய வந்தது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி உட்பட போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...