பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் எலக்ட்ரீசியன் பிணமாக மீட்பு!

கோவை: கோவை அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் எலக்ட்ரீசியன் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் எலக்ட்ரீசியன் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சசிப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதால் நாளடைவில் அவர் தொடர்ந்து குடிக்கு அடிமையானார். இதனால் குடித்துவிட்டு குடும்பத்தைக் கவனிக்காமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சசிப்பிரியா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கணவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். உடனடியாக அவரது வீட்டின் கதவை தட்டிப் பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவரது மனைவி சசிப்பிரியாவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த சசிப்பிரியா வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் தனது கணவர் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சசிப் பிரியா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...