வரும் 23ம் தேதி ராகுல் காந்தி கோவை வருகை: சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்!

கோவை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 23ம் தேதியன்று கோவையில் இருந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்.


கோவை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 23ம் தேதியன்று கோவையில் இருந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வரும் 23ம் தேதி கோவை வரும் ராகுல், அங்கு ஏற்பாடு செய்யப்படும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பின்னர் அன்றைய தினமே சிறு, குறு தொழில் முனைவோரை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து, 24 மற்றும் 25ம் தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர். திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...