கோவை: கோவை மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மீட்புப் பணித் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள், தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து உபகரணங்களை ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மீட்புப் பணித் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள், தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து உபகரணங்களை ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மீட்புப் பணித் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு வந்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்குள்ள பாதுகாப்பு உபகரணங்களை அனைத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அவைகள் நன்றாக செயல்படுகிறதா என பார்வையிட்டார்.
பின்னர், தீயணைப்புத் துறையின் சார்பாக தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடமும், பள்ளி மாணவ மாணவிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். தீ செயலியின் உடைய செயல்பாடுகள் எப்படி என்பதைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இதில் அங்கு வந்திருந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் சந்தேகங்களை கேட்டு பயன் பெற்றனர்.
இதனையடுத்து, தீயணைப்புத் துறை பணியாளர்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்தனர். பல்வேறு நபர்களுடைய குறைகளை கேட்டு அறிந்துகொண்டார். பிறகு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் வரவேற்றார். உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி அலுவலர்கள் பாலசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு மீட்புப் பணித் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு வந்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்குள்ள பாதுகாப்பு உபகரணங்களை அனைத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அவைகள் நன்றாக செயல்படுகிறதா என பார்வையிட்டார்.
பின்னர், தீயணைப்புத் துறையின் சார்பாக தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடமும், பள்ளி மாணவ மாணவிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். தீ செயலியின் உடைய செயல்பாடுகள் எப்படி என்பதைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இதில் அங்கு வந்திருந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் சந்தேகங்களை கேட்டு பயன் பெற்றனர்.
இதனையடுத்து, தீயணைப்புத் துறை பணியாளர்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்தனர். பல்வேறு நபர்களுடைய குறைகளை கேட்டு அறிந்துகொண்டார். பிறகு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் வரவேற்றார். உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி அலுவலர்கள் பாலசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.