கோவை: செல்போன் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: செல்போன் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை வடவள்ளி பி.என் புதூரைச் சேர்ந்தவர் முத்து வெள்ளத்துரை. தொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தெலுங்குபாளையம் புதூர் பகுதிக்குச் சென்றார். அங்கு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அவரது செல்போன் மற்றும் 300 ரூபாய் திருட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் முத்து வெள்ளத்துரையின் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்போன் மற்றும் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மற்றும் அவரது நண்பர் ஹரிஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தபால் ஊழியர் திடீரென சுருண்டு விழுந்து பலி!
கோவை, ஜன. 16- கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 63). இவர் அழகேசன் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று அவர் தனது சைக்கிளில் ரத்தினபுரி கே.கே நகர் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெகதீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளி பி.என் புதூரைச் சேர்ந்தவர் முத்து வெள்ளத்துரை. தொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தெலுங்குபாளையம் புதூர் பகுதிக்குச் சென்றார். அங்கு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அவரது செல்போன் மற்றும் 300 ரூபாய் திருட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் முத்து வெள்ளத்துரையின் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்போன் மற்றும் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மற்றும் அவரது நண்பர் ஹரிஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தபால் ஊழியர் திடீரென சுருண்டு விழுந்து பலி!
கோவை, ஜன. 16- கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 63). இவர் அழகேசன் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று அவர் தனது சைக்கிளில் ரத்தினபுரி கே.கே நகர் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெகதீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.