கோவை: டெல்லியில் மூடுபனி காரணமாக கோவை வந்துசேர வேண்டிய விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்தன.
கோவை: டெல்லியில் மூடுபனி காரணமாக கோவை வந்துசேர வேண்டிய விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்தன.
தலைநகர் டெல்லியில் இன்று மூடுபனி காரணமாக மோசமான வானிலை நிலவியது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தன.
இண்டிகோ விமானம் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தது. இந்த விமானம் காலை 9.30 மணிக்கு வந்து மீண்டும் காலை 10 மணிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டது. மூடுபனி காரணமாக, இந்த விமானம் தாமதமாகி மாலை 3 மணிக்கு வந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டது. அதேபோல் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படவிருந்த மற்றொரு விமானமான ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.
தலைநகர் டெல்லியில் இன்று மூடுபனி காரணமாக மோசமான வானிலை நிலவியது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தன.
இண்டிகோ விமானம் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தது. இந்த விமானம் காலை 9.30 மணிக்கு வந்து மீண்டும் காலை 10 மணிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டது. மூடுபனி காரணமாக, இந்த விமானம் தாமதமாகி மாலை 3 மணிக்கு வந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டது. அதேபோல் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படவிருந்த மற்றொரு விமானமான ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.