திருப்பூர்: விமர்சனம் என்பது பாசிட்டிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேசினார்.
திருப்பூர்: விமர்சனம் என்பது பாசிட்டிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேசினார்.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த பெரும் வரவேற்பு காரணமாக வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்குக்கு வந்த மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் நுழைந்து ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துப் பேசினார்.
இதையடுத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், `விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனது அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவுக்கு பார்த்துக்கொள்ள முயற்சி செய்வேன். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருப்பதால் தான் திரையரங்குக்கு கூட்டமாக வருகின்றனர். விமர்சனம் என்பது பாசிட்டிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்றார். மாஸ்டர் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் பேசும்போது, `கொரோனாவுக்குப் பிறகு இந்திய அளவில் வெளியான பெரிய படம் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் தரமாக இருந்தால் மக்கள் வருவார்கள். அந்தவகையில் மாஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஓ.டி.டி தளங்களைவிட மக்கள் திரையரங்குகளில் பார்க்கவே விரும்புகிறார்கள். இனி நிச்சயம் திரையரங்குகளில் அதிக படங்கள் வெளியாகும். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு நன்றி' என்றார்.
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த பெரும் வரவேற்பு காரணமாக வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்குக்கு வந்த மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் நுழைந்து ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துப் பேசினார்.
இதையடுத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், `விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனது அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவுக்கு பார்த்துக்கொள்ள முயற்சி செய்வேன். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருப்பதால் தான் திரையரங்குக்கு கூட்டமாக வருகின்றனர். விமர்சனம் என்பது பாசிட்டிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்றார். மாஸ்டர் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் பேசும்போது, `கொரோனாவுக்குப் பிறகு இந்திய அளவில் வெளியான பெரிய படம் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் தரமாக இருந்தால் மக்கள் வருவார்கள். அந்தவகையில் மாஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஓ.டி.டி தளங்களைவிட மக்கள் திரையரங்குகளில் பார்க்கவே விரும்புகிறார்கள். இனி நிச்சயம் திரையரங்குகளில் அதிக படங்கள் வெளியாகும். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு நன்றி' என்றார்.