பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (55), ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரேமலதா(48). இவர்கள், இருவரும் நேற்று பொள்ளாச்சி வருவதற்காக இருசக்கர வாகனத்தில் கோவை ரோடு -நஞ்சை கவுண்டன்புதூர் அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்த போது, அவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (55), ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரேமலதா(48). இவர்கள், இருவரும் நேற்று பொள்ளாச்சி வருவதற்காக இருசக்கர வாகனத்தில் கோவை ரோடு -நஞ்சை கவுண்டன்புதூர் அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்த போது, அவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.

கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த பத்மநாபன் (28) என்பவர் இயக்கி வந்த நான்கு சக்கர வாகனம், தங்கராஜ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், பிரேமலதா படுகாயங்களுடன் போராடி வந்தார். பின்னர், அங்கு சென்ற பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் காயமடைந்த பிரேமலதாவை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், தங்கராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த பத்மநாபன் (28) என்பவர் இயக்கி வந்த நான்கு சக்கர வாகனம், தங்கராஜ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், பிரேமலதா படுகாயங்களுடன் போராடி வந்தார். பின்னர், அங்கு சென்ற பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் காயமடைந்த பிரேமலதாவை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், தங்கராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.