திருப்பூர்: திருப்பூரில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்காக கால்கோள் விழா நடைபெற்றது. அப்போது காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவதாக ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்காக கால்கோள் விழா நடைபெற்றது. அப்போது காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவதாக ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.

அதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த இருப்பதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 500 காளைகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாகவும் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப் போவதாகவும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அழகு மலை அடிவாரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டி, கும்மியடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.
அதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது.
பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த இருப்பதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 500 காளைகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாகவும் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப் போவதாகவும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அழகு மலை அடிவாரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டி, கும்மியடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.