கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கையும் களவுமாக சிக்கினார்.
கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கையும் களவுமாக சிக்கினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை அடுத்த கதிர் நாயக்கன் பாளையத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாரத் (வயது 25) என்பதும், கஞ்சா விற்பதற்காக அவர் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள பாலத்திற்கு கீழே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பதற்காக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மாட பட்டியைச் சேர்ந்த கருணாகரன் (வயது 41) என்பதும், கஞ்சா விற்பதற்காக அவர் நின்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மீது அடி-தடி, கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை அடுத்த கதிர் நாயக்கன் பாளையத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாரத் (வயது 25) என்பதும், கஞ்சா விற்பதற்காக அவர் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள பாலத்திற்கு கீழே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பதற்காக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மாட பட்டியைச் சேர்ந்த கருணாகரன் (வயது 41) என்பதும், கஞ்சா விற்பதற்காக அவர் நின்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மீது அடி-தடி, கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.