பொள்ளாச்சி: விவசாயத்தை மையமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி: விவசாயத்தை மையமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பட்டி பொங்கல் வழிபாடு
இந்த ஆண்டுக்கான மாட்டுப்பொங்கல் நேற்று நடைபெற்ற நிலையில், முன்னதாக காலை முதலே விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த, மாடு மற்றும் காளைகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், நேற்று இரவு தங்கள் குடும்பத்தாருடன் பட்டி முன்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, மாடுகளை பட்டிக்குள் நடக்கவிட்டு பட்டி பொங்கலை கொண்டாடினர்.
பின்னர், பாரம்பரிய முறைப்படி பச்சரிசி சாதம் வைத்து பல வகையான நாட்டு காய்களை கொண்டு சமைத்த பட்டி குழம்புடன், குடும்பத்தாருடன், விவசாயிகள் உண்டு மகிழ்ந்தனர்.