பவானி ஆற்றுச் சுழலில் சிக்கிய 6 இளைஞர்கள் உயிருடன் மீட்பு!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நீரில் சிக்கிய 6 இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நீரில் சிக்கிய 6 இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் ( வயது 20), கிங்ஸ்லி (வயது 21), மாதேஷ் (வயது 21), சியாம் சுந்தர் (வயது 21), கண்ணன் பாபு (வயது 20) ஜெயராஜ் (வயது 21). கல்லூரி நண்பர்களான இவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை அருகே உள்ள விளாமரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் பவானி ஆற்றில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்தது. மேலும் அந்த இடத்தில் நீர்ச்சுழல் இருந்ததால் இளைஞர்கள் நீரில் சிக்கித் தவித்தனர்.

தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களில் கயிற்றைக் கட்டி ஒவ்வொன்றாக அனுப்பி ஒவ்வொருவராக உயிருடன் மீட்டனர். சாதுர்யமாக செயல்பட்டு மீட்புப் பணியில் சேர்ந்த ஈடுபட்ட தீயணைப்புத் துறையினருக்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...