கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ரத்தினபுரி இடையப்பகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்
(26). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூர் காமராஜபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதியது.
இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதியில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ரத்தினபுரி இடையப்பகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்
(26). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூர் காமராஜபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதியது.
இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதியில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.