கோவை: பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி சிலம்பம் சுற்றினார். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோவை: பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி சிலம்பம் சுற்றினார். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நல்லறம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் விழா தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டனர்.
விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பறை இசை மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் இணைந்து தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பறை இசை இசைத்ததுடன் சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.

அப்போது அவர்களை பாராட்டிய அமைச்சர் வேலுமணி அவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினார். இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நல்லறம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் விழா தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டனர்.
விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பறை இசை மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் இணைந்து தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பறை இசை இசைத்ததுடன் சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.
அப்போது அவர்களை பாராட்டிய அமைச்சர் வேலுமணி அவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினார். இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.