கோவை: தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
கோவை: தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஆவாரம்பாளையம், ஷோபா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் குரும்பபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக செல்வராஜ்மீது மின்கம்பி பட்டு தூக்கி வீசியது.
இதில் கீழே விழுந்த அவர் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் பாபு அளித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஆவாரம்பாளையம், ஷோபா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் குரும்பபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக செல்வராஜ்மீது மின்கம்பி பட்டு தூக்கி வீசியது.
இதில் கீழே விழுந்த அவர் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் பாபு அளித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.