நீலகிரி: குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் மையம் சார்பில் முகாமில் 73-வது ராணுவ தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி: குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் மையம் சார்பில் முகாமில் 73-வது ராணுவ தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி ஆங்கிலேய ராணுவத்தளபதி சர் பிரான்சிஸிடமிருந்து இந்தியாவின் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் எம்.கரியப்பா ராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஜனவரி 15-ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் (பொறுப்பு)கர்னல் என்.கே.தாஸ் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி ஆங்கிலேய ராணுவத்தளபதி சர் பிரான்சிஸிடமிருந்து இந்தியாவின் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் எம்.கரியப்பா ராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஜனவரி 15-ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் (பொறுப்பு)கர்னல் என்.கே.தாஸ் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.