பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம், கரட்டுப்பாளையம் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதியாகும்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம், கரட்டுப்பாளையம் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதியாகும்.
இங்கு தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி வனத்திலிருந்து காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் இன்று 2 காட்டு யானை வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் உலா வந்தது. இதையடுத்து, பீதியடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த பொள்ளாச்சி வனத்துறை ஊழியர்கள், காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.