நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கிண்ணக்கொரை கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்த மரம் மற்றும் பாறைகளை ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கிண்ணக்கொரை கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்த மரம் மற்றும் பாறைகளை ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சாரல் மழையும், கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை முனீஸ்வரர் கோயில் அருகே மண் சரிந்து விழுந்து கிடந்தது.
மேலும் பெரிய பாறைகளும், மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் விழுந்து கிடந்தன. இதனால் இரிய சீகை, அண்ணா நகர் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.
இதுபற்றி இப்பகுதி மக்கள் கிராம உதவி ஆய்வாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஜே.சி.பி. வாகன உதவியுடன் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த பாறைகளையும், மண் குவியல்களையும் சீர்செய்து போக்குவரத்தை சரிசெய்தனர்.