பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்-கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவு வழங்க தடை செய்யப்பட்டது.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் - கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக. சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவு வழங்க தடை செய்யப்பட்டது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினரால், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விவசாய தோட்டங்களில், புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் இங்கு உள்ள கும்கி யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், டாப்சிலிப் பகுதியில் யானை சவாரி மூலம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், இந்த யானைகள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழாவானது, வனத்துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, யானைகளின் நலன் கருதி,கோழிகமுத்தி யானைகள் முகாமிலேயே, இந்த யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இன்று, முகாமில் உள்ள யானைகளை ஒன்றாக நிற்க வைத்து, பூமாலை அணிவித்து யானைகள் அலங்கரிக்கபட்டன. மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்துபாரம்பரிய முறைப்படி, புது பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, பொங்கல் உள்ளிட்டவற்றை படையலிட்டு பூஜைகள் செய்து யானைகளுக்கு வழங்கினர். கொரோனா அச்சம் காரணமாக, சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில், அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவளிக்க வனத்துறை தடை விதித்தனர்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினரால், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விவசாய தோட்டங்களில், புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் இங்கு உள்ள கும்கி யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், டாப்சிலிப் பகுதியில் யானை சவாரி மூலம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், இந்த யானைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழாவானது, வனத்துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, யானைகளின் நலன் கருதி,கோழிகமுத்தி யானைகள் முகாமிலேயே, இந்த யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இன்று, முகாமில் உள்ள யானைகளை ஒன்றாக நிற்க வைத்து, பூமாலை அணிவித்து யானைகள் அலங்கரிக்கபட்டன. மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்துபாரம்பரிய முறைப்படி, புது பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, பொங்கல் உள்ளிட்டவற்றை படையலிட்டு பூஜைகள் செய்து யானைகளுக்கு வழங்கினர். கொரோனா அச்சம் காரணமாக, சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில், அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவளிக்க வனத்துறை தடை விதித்தனர்.