கோவை: இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா என்று மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா என்று மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளுவர் தினமான இன்று தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் மாநகராட்சியால் நடத்தப்பட்டுவரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனூர் மாடு அறுவைமனைகள், துடியலூர் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின்கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்த உத்தரவை மீறி செயல்படுவோர்மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருந்தார். இதையடுத்து இன்று இறைச்சி கடைகள் இயங்குகின்றனவா? என மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.