கோவை: உழவர் பெரு மக்களின் முக்கிய பண்டிகையான மாட்டுப்பொங்கல், நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, விவசாயத்தை பிரதானமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கோவை: உழவர் பெரு மக்களின் முக்கிய பண்டிகையான மாட்டுப்பொங்கல், நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, விவசாயத்தை பிரதானமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தாங்கள் வைத்திருக்கும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பாரம்பரிய முறைப்படி பனை ஓலையில் பட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் விவசாய பணியில் தங்களுக்கு உறுதுணையாகவும், நண்பனாகவும் விளங்குகின்ற கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகும்.
நாளை இரவு பட்டிக்குள் மாடுகளை அடைத்து, ஏழு வகையான பொங்கல் வைத்து உற்றார் உறவினர்களுடன் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளதாகவும், அதேபோல் உழவர் பெருமக்களுடன் விவசாய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக முதலாளி, தொழிலாளி என்ற வித்தியாசமில்லாமல் சகோதரப் பாசத்துடன் ஒன்றாக அமர்ந்து அவர்களுடன் உணவு அருந்தி மாட்டுப் பொங்கலை கொண்டாட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை இரவு மாட்டு பொங்கல் விழா விவசாயத் தோட்டங்களில் களைகட்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.