கோவை: கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு மத்திய அரசின் விவசாய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு மத்திய அரசின் விவசாய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி சுப்புராயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாவட்ட தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், தங்கவேலு மற்றும் பலர் கலந்து கொண்டு சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் நாடாளுமன்ற எம்.பி சுப்புராயன் கூறியதாவது: மத்திய அரசு இயற்றிய விவசாய வேளாண் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்புரேட்களுக்கு ஆதராவான சட்டம். விவசாய பொருட்களுக்கு விலைகளை கார்ப்புரேட் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.
இந்த சட்டத்தால் பொது விநியோக முறை கைவிடப்படும், ரேசன் கடைகள் மூடப்படும். எனவே, தான் இதனை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் போராடி வருகின்றனர், இவ்வாறு எம் பி சுப்புராயன், கூறினார்.
இதில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி சுப்புராயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாவட்ட தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், தங்கவேலு மற்றும் பலர் கலந்து கொண்டு சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் நாடாளுமன்ற எம்.பி சுப்புராயன் கூறியதாவது: மத்திய அரசு இயற்றிய விவசாய வேளாண் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்புரேட்களுக்கு ஆதராவான சட்டம். விவசாய பொருட்களுக்கு விலைகளை கார்ப்புரேட் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.
இந்த சட்டத்தால் பொது விநியோக முறை கைவிடப்படும், ரேசன் கடைகள் மூடப்படும். எனவே, தான் இதனை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் போராடி வருகின்றனர், இவ்வாறு எம் பி சுப்புராயன், கூறினார்.