நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன பெண் குழந்தையை தூக்கிச் சென்ற தந்தையை சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன பெண் குழந்தையை தூக்கிச் சென்ற தந்தையை சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்கள் ஆன பெண் குழந்தை நேற்று முன்தினம் மாலை காணாமல் போனது. இதுகுறித்து ஊட்டி போலீசில் சுகாதாரத்துறையினர் தகவல் செய்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர். குன்னூர் பில்லூர் மட்டம் பகுதியில் உள்ள கேமராவில் பதிவான காட்சியில், குழந்தையை தூக்கிச் செல்வது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த வழியாக தேடிச் சென்றனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனை டாக்டர் விஜயராஜ் மற்றும் செவிலியர்கள் போலீசாருடன் சென்று அங்கு மறைந்திருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு தாய் கவுரியிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் குழந்தையைக் கடத்தியது கவுரியின் கணவர் சண்முகவேல் (வயது 37) என்பதும், குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை தூக்கிச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து சண்முகவேலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்கள் ஆன பெண் குழந்தை நேற்று முன்தினம் மாலை காணாமல் போனது. இதுகுறித்து ஊட்டி போலீசில் சுகாதாரத்துறையினர் தகவல் செய்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர். குன்னூர் பில்லூர் மட்டம் பகுதியில் உள்ள கேமராவில் பதிவான காட்சியில், குழந்தையை தூக்கிச் செல்வது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த வழியாக தேடிச் சென்றனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனை டாக்டர் விஜயராஜ் மற்றும் செவிலியர்கள் போலீசாருடன் சென்று அங்கு மறைந்திருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு தாய் கவுரியிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் குழந்தையைக் கடத்தியது கவுரியின் கணவர் சண்முகவேல் (வயது 37) என்பதும், குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை தூக்கிச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து சண்முகவேலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.