கோவை: சர்வ மதத்தலைவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.
கோவை: சர்வ மதத்தலைவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.

குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் சுடர் குடும்பத்தினருக்கான (எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்) சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது. சாந்தி ஆசிரமம் தலைவர் மருத்துவர் வினு அரம், தலைமை இளைஞர் அணி பொறுப்பாளர் விஜயராகவன் நிகழ்ச்சியை வழிநடத்தினர். பல்வேறுமதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், ஹார்வெஸ்டர் மிஷின் செயலாளர் ஃபாதர் ரூபன் சிறப்புரை ஆற்றினர். சகோதரர் அப்துல் ஹக்கீம் பேசும்போது, விவசாயிகள், விவசாயத்தின் முக்கியத்துவம், நோய் நிவாரணம் பற்றியும், சமூக ஒற்றுமை பற்றியும் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலிருந்து எடுத்துக்காட்டுடன் பேசினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா நடராஜன் பரிசுகளை வழங்கினார்.
குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் சுடர் குடும்பத்தினருக்கான (எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்) சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது. சாந்தி ஆசிரமம் தலைவர் மருத்துவர் வினு அரம், தலைமை இளைஞர் அணி பொறுப்பாளர் விஜயராகவன் நிகழ்ச்சியை வழிநடத்தினர். பல்வேறுமதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், ஹார்வெஸ்டர் மிஷின் செயலாளர் ஃபாதர் ரூபன் சிறப்புரை ஆற்றினர். சகோதரர் அப்துல் ஹக்கீம் பேசும்போது, விவசாயிகள், விவசாயத்தின் முக்கியத்துவம், நோய் நிவாரணம் பற்றியும், சமூக ஒற்றுமை பற்றியும் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலிருந்து எடுத்துக்காட்டுடன் பேசினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா நடராஜன் பரிசுகளை வழங்கினார்.