புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது!

கோவை: புனேவில் இருந்து தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.


கோவை: புனேவில் இருந்து தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திடமிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறப்பு விமானம் மூலம் இன்று காலை இந்த மருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.

அங்கிருந்து 3 வாகனங்கள் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பதப்படுத்தும் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மருந்துகளை, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 10 முகாம்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அவை அந்தந்த முகாம்கள் மூலம் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. இதில் கோவை மாவட்டத்திற்கு 40,600 கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டில்கள் அனுப்பப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “முதல்கட்டமாக சீரம் நிறுவனத்தின் 5.56 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும், பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் தமிழகம் வர உள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.

கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்கு எந்த தடுப்பூசிகளை போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்தார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...