தலைமறைவான கேரளா பெண் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக திருச்சூரை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி குரியா பிள்ளை மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையறிந்த அந்த பெண் ஷார்ஜா சென்று தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் குரியா பிள்ளை ஷார்ஜாவில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வருவதாக கேரள மாநில குற்ற பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து அவர்கள், கோவை விமான நிலைய குடியுரிமை பிரிவு போலீசாரிடம் இது குறித்து தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். அதன்படி இன்று கோவை வந்த குரியா பிள்ளையிடம் கோவை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் கோவை வந்து அந்த பெண்ணை கைது செய்து கேரள மாநிலத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...