கேரள மாநிலத்தில் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக திருச்சூரை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி குரியா பிள்ளை மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையறிந்த அந்த பெண் ஷார்ஜா சென்று தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் குரியா பிள்ளை ஷார்ஜாவில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வருவதாக கேரள மாநில குற்ற பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அவர்கள், கோவை விமான நிலைய குடியுரிமை பிரிவு போலீசாரிடம் இது குறித்து தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். அதன்படி இன்று கோவை வந்த குரியா பிள்ளையிடம் கோவை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் கோவை வந்து அந்த பெண்ணை கைது செய்து கேரள மாநிலத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இதை தொடர்ந்து அவர்கள், கோவை விமான நிலைய குடியுரிமை பிரிவு போலீசாரிடம் இது குறித்து தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். அதன்படி இன்று கோவை வந்த குரியா பிள்ளையிடம் கோவை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் கோவை வந்து அந்த பெண்ணை கைது செய்து கேரள மாநிலத்திற்கு அழைத்துச்சென்றனர்.