நீலகிரி: குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்து உறங்கியபோது அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்த பெண் பலியானார். மயங்கிய நிலையில் இருந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நீலகிரி: குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்து உறங்கியபோது அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்த பெண் பலியானார். மயங்கிய நிலையில் இருந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக எஸ்டேட் பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் விறகு மற்றும் அடுப்புக்கரியை பயன்படுத்தி தீமூட்டி குளிர்காய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் உள்ள வீட்டில் கஜபதி மற்றும் அவரது தம்பி மனைவி கலாவதி, மகன் மகேந்திரன் ஆகிய மூவரும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அப்போது தூக்கம் வருவதுபோல் இருந்ததால் மூவரும் உறங்கச் சென்றனர். காலையில் வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்டு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஏற்கனவே கலாவதி உயிரிழந்தது தெரியவந்தது. முதற்கட்டவிசாரணையில் அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய வாயுவை சுவாசித்ததால் கலாவதி உயிரிழந்தது தெரியவந்தது. உறவினர் கஜபதி மற்றும் அவரது மகன் மகேந்திரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக எஸ்டேட் பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் விறகு மற்றும் அடுப்புக்கரியை பயன்படுத்தி தீமூட்டி குளிர்காய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் உள்ள வீட்டில் கஜபதி மற்றும் அவரது தம்பி மனைவி கலாவதி, மகன் மகேந்திரன் ஆகிய மூவரும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அப்போது தூக்கம் வருவதுபோல் இருந்ததால் மூவரும் உறங்கச் சென்றனர். காலையில் வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்டு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஏற்கனவே கலாவதி உயிரிழந்தது தெரியவந்தது. முதற்கட்டவிசாரணையில் அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய வாயுவை சுவாசித்ததால் கலாவதி உயிரிழந்தது தெரியவந்தது. உறவினர் கஜபதி மற்றும் அவரது மகன் மகேந்திரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.