முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்தது: அ.தி.மு.க.வே வேட்பாளரை தீர்மானிக்கும் - பாஜக தமிழக பொறுப்பாளர் சி டி ரவி

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சார்சை முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை, அவர்களே தீர்மானிக்கலாம், என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி அறிவித்துள்ளார்.


சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சார்சை முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை, அவர்களே தீர்மானிக்கலாம், என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி அறிவித்துள்ளார்.

பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அனைைவரும் நினைத்திருந்த நிலையில், தமிழக பா ஜ க தலைவர் எல்.முருகன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் தலைமை தான் முடிவு செய்யும், என்றும் முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருந்தாலும், அது குறித்தான அறிவிப்பை, பாஜக தலைமையே அறிவிக்கும், என தெரிவித்தார்.

அவரின் கருத்து அரசியல் வட்டாரங்களில், குறிப்பாக அதிமுக மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் பலர் முருகனுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று உறுதியாக கூறி வந்தனர். அதன் படி, கடந்த 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற, அதிமுக பொது குழு கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர், எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும், கூட்டணி ஆட்சி கனவோடு யாரும் அணுகாதீர்கள் எனவும் கூட்டணி ஆட்சி என்பதற்கு தேவை இல்லை என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கூறினார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சை தொடர்ந்து வந்த நிலையில், திருச்சியில் நிருபர்களிடம் பேசிய பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரே அந்த கட்சியே தீர்மானிக்கும். கூட்டணியில் பெரிய கட்சி என்பதால் அ.தி.மு.க.தான் முடிவு எடுக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றனர். கே.பி.முனுசாமி கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, என கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...