கோவை: கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் கோர்ட் உத்தரவை மீறி ஆளுங்கட்சியினரின் கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் கோர்ட் உத்தரவை மீறி ஆளுங்கட்சியினரின் கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக பல ரேஷன் கடைகளின் முன்பு கொடிகள் கட்டப்பட்டும், பேனர்கள் வைக்கப்பட்டும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டும் வருகின்றன. இதனால் ஆளும் கட்சியினர் பொங்கல் பரிசு வழங்கப்படுவதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ரேசன் கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பு கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை ராமநாதபுரம், புலியகுளம், சுங்கம், நல்லாம்பாளையம், சாமி நகர் பகுதிகளிலும், கோயம்புத்தூர் மதுக்கரை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் இதுவரை அகற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர பொங்கல் பரிசு வழங்கப்படும் கடைகளில் ஆளும் கட்சியினர் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது கோவை மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற விதிமுறைகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி கொடிகள், பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக பல ரேஷன் கடைகளின் முன்பு கொடிகள் கட்டப்பட்டும், பேனர்கள் வைக்கப்பட்டும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டும் வருகின்றன. இதனால் ஆளும் கட்சியினர் பொங்கல் பரிசு வழங்கப்படுவதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ரேசன் கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பு கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை ராமநாதபுரம், புலியகுளம், சுங்கம், நல்லாம்பாளையம், சாமி நகர் பகுதிகளிலும், கோயம்புத்தூர் மதுக்கரை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் இதுவரை அகற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர பொங்கல் பரிசு வழங்கப்படும் கடைகளில் ஆளும் கட்சியினர் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது கோவை மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற விதிமுறைகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி கொடிகள், பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.