கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை 39 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 10 நாட்களில் 12 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தற்போது 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்காக மட்டும் தனியாக டெங்கு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன. டெங்கு அறிகுறியுடன் வருபவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக சிறப்பு மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை 39 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 10 நாட்களில் 12 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தற்போது 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்காக மட்டும் தனியாக டெங்கு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன. டெங்கு அறிகுறியுடன் வருபவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக சிறப்பு மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.