கோவையில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு, மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள்: டீன் காளிதாஸ் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை 39 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 10 நாட்களில் 12 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தற்போது 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்காக மட்டும் தனியாக டெங்கு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன. டெங்கு அறிகுறியுடன் வருபவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக சிறப்பு மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...