கோவை: கோவை அன்னூர் அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசரின் வீட்டுப் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை அன்னூர் அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசரின் வீட்டுப் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
கோவை அன்னூர் எஸ்.எஸ்.குளம் பொன்னே கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் ஐசக். இவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது குடும்பத்துடன் தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு பிறகு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள் மாயமானதும், மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஐசக் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.
கோவை அன்னூர் எஸ்.எஸ்.குளம் பொன்னே கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் ஐசக். இவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது குடும்பத்துடன் தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு பிறகு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள் மாயமானதும், மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஐசக் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.