கோவை: போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் இதேபோல் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலமானது.
கோவை: போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் இதேபோல் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலமானது.
கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ஜீவா ராம். இவர் இடையர்பாளையம் பகுதியில் நகை அடகுக் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தன்னிடம் தங்க மோதிரம் இருப்பதாகவும், அதனை அடகு வைத்து பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது பணம் தருவதாகக்கூறி மோதிரத்தை வாங்கி சோதனை செய்து பார்த்தார். பரிசோதித்துப் பார்த்ததில் அது தங்க மோதிரம் அல்ல, போலி நகை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் அந்தப் பெண்ணிடம் நைசாக பேசி பணம் தருவதாக காத்திருக்கச் சொன்னார். பின்னர் துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த இளம் பெண்ணை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்தப் பெண் ஜி.எம்.மில்ஸ் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மனைவி ஜெயபிரபா (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர் இதேபோல 40 -க்கும் மேற்பட்ட கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயபிரபாமீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ஜீவா ராம். இவர் இடையர்பாளையம் பகுதியில் நகை அடகுக் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தன்னிடம் தங்க மோதிரம் இருப்பதாகவும், அதனை அடகு வைத்து பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது பணம் தருவதாகக்கூறி மோதிரத்தை வாங்கி சோதனை செய்து பார்த்தார். பரிசோதித்துப் பார்த்ததில் அது தங்க மோதிரம் அல்ல, போலி நகை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் அந்தப் பெண்ணிடம் நைசாக பேசி பணம் தருவதாக காத்திருக்கச் சொன்னார். பின்னர் துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த இளம் பெண்ணை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்தப் பெண் ஜி.எம்.மில்ஸ் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மனைவி ஜெயபிரபா (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர் இதேபோல 40 -க்கும் மேற்பட்ட கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயபிரபாமீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.