பொள்ளாச்சி: ஆழியார் சோதனைச்சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி தெரிகிறது. அதை அப்பகுதியில் உள்ள வனக் காப்பகத்துக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி: ஆழியார் சோதனைச்சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி தெரிகிறது. அதை அப்பகுதியில் உள்ள வனக் காப்பகத்துக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை, கரடி என பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆழியார் சோதனைச் சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே வனத்தை விட்டு வெளியேறுவதற்காக ஒற்றை காட்டு யானை திடீரென வந்ததால் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனச்சரகர் புகழேந்தி கூறுகையில், 'வருடத்துக்கு ஒருமுறை ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் நடமாடுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் காட்டு யானை ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் வாகன ரோந்துப் பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்' என்றார்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை, கரடி என பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆழியார் சோதனைச் சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே வனத்தை விட்டு வெளியேறுவதற்காக ஒற்றை காட்டு யானை திடீரென வந்ததால் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனச்சரகர் புகழேந்தி கூறுகையில், 'வருடத்துக்கு ஒருமுறை ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் நடமாடுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் காட்டு யானை ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் வாகன ரோந்துப் பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்' என்றார்.