கோவை: வீட்டில் வளர்த்து வந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர்.
கோவை: வீட்டில் வளர்த்து வந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், டிரைவர். இவரது வீட்டில் சந்தன மரம் வளர்த்து வந்தார். 25 அடி உயரம் வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார் வழக்கம்போல வீட்டின் முன்பக்க கதவை மூடிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 2 மணி அளவில் மரம் முறிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டு எழுந்த செந்தில்குமார் வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 மர்ம நபர்கள் செந்தில்குமாரின் வீட்டு முன்பு வளர்த்து வந்த சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் 5 அடி உயரமுள்ள சந்தன மரத் துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், டிரைவர். இவரது வீட்டில் சந்தன மரம் வளர்த்து வந்தார். 25 அடி உயரம் வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார் வழக்கம்போல வீட்டின் முன்பக்க கதவை மூடிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 2 மணி அளவில் மரம் முறிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டு எழுந்த செந்தில்குமார் வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 மர்ம நபர்கள் செந்தில்குமாரின் வீட்டு முன்பு வளர்த்து வந்த சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் 5 அடி உயரமுள்ள சந்தன மரத் துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.