முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கன்: அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொள்ளாச்சி ஜெயராமன் பாராட்டு!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கனாகச் செயல்படுகிறார் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.



சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கனாகச் செயல்படுகிறார் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தீர்மானங்கள் பின்வருமாறு:-

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை நிறுத்துவதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதா நினைவிடத்தை உலகப்புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகியோருக்கு முழு அதிகாரம் வழங்குவது, கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசுப் பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவிப்பது, தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பது, தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்பது எனவும், உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து வேலைவாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவது, நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளைத் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, அ.தி.மு.க.வின் ராமன் - லட்சுமணனாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கனாகச் செயல்படுகிறார் என்றும் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...