நீலகிரி: கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறக்கப்பட்டது.
நீலகிரி: கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
மேலும், யானை சவாரி, வாகன சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் அங்குள்ள சுற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை புலிகள் காப்பக நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைக்குட்பட்டு 50% இருக்கைகளுடன் இன்று முதல் வாகன சவாரி துவக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், யானைகள் முகாமும் திறக்கப்பட்டது.

அரசு அறிவித்துள்ள அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா விடுதிகள் அனைத்தும் 11ம் தேதி முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
மேலும், யானை சவாரி, வாகன சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் அங்குள்ள சுற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை புலிகள் காப்பக நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைக்குட்பட்டு 50% இருக்கைகளுடன் இன்று முதல் வாகன சவாரி துவக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், யானைகள் முகாமும் திறக்கப்பட்டது.
அரசு அறிவித்துள்ள அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா விடுதிகள் அனைத்தும் 11ம் தேதி முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.