கோவை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடலுறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டு அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றனர்.
கோவை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடலுறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டு அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் ரோஹித் கண்ணா (வயது 17). இவர் கடந்த 31-ம் தேதி கோவை அருகே பொள்ளாச்சி பல்லடம் சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். மருத்துவமனை தலைமை டாக்டர் பக்தவத்சலம் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ குழுவினர் ரோஹித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல், ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர் கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் கே.ஜி. மருத்துவமனை நோயாளிக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டது. இதற்காக தனி விமானம் மூலம் இதயம், நுரையீரல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 பேர் புதுவாழ்வு பெற்றனர். மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரை டாக்டர்கள் பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் ரோஹித் கண்ணா (வயது 17). இவர் கடந்த 31-ம் தேதி கோவை அருகே பொள்ளாச்சி பல்லடம் சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். மருத்துவமனை தலைமை டாக்டர் பக்தவத்சலம் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ குழுவினர் ரோஹித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல், ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர் கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் கே.ஜி. மருத்துவமனை நோயாளிக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டது. இதற்காக தனி விமானம் மூலம் இதயம், நுரையீரல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 பேர் புதுவாழ்வு பெற்றனர். மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரை டாக்டர்கள் பாராட்டினர்.