கோவை: பறவை காய்ச்சல் எதிரொலியால் கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தமிழக கேரள எல்லைகளில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கோவை: பறவை காய்ச்சல் எதிரொலியால் கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தமிழக கேரள எல்லைகளில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் வாத்துகள் மூலம் பரவிய பறவைக் காய்ச்சல் கோழி உள்ளிட்ட பறவைகளுக்கும் பரவி வருகிறது.
இதனால் இந்த பறவைக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், உள்ளிட்ட தமிழக, கேரள எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர், உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினிகள் தெளித்து தமிழகப் பகுதியில் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்பணிகளை இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து கிருமி நாசிகள் தெளித்து தமிழக பகுதியில் அனுமதிக்க வேண்டுமென்று கால்நடை துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் வரும் வரை இப்பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் வாத்துகள் மூலம் பரவிய பறவைக் காய்ச்சல் கோழி உள்ளிட்ட பறவைகளுக்கும் பரவி வருகிறது.
இதனால் இந்த பறவைக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், உள்ளிட்ட தமிழக, கேரள எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர், உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினிகள் தெளித்து தமிழகப் பகுதியில் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்பணிகளை இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து கிருமி நாசிகள் தெளித்து தமிழக பகுதியில் அனுமதிக்க வேண்டுமென்று கால்நடை துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் வரும் வரை இப்பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.