நாய்கள் கடித்ததால் காயமடைந்த புள்ளிமான் சாவு!

கோவை: நாய்கள் கடித்ததால் காயமடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை: நாய்கள் கடித்ததால் காயமடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மருதமலை சாலையில் நேற்று காலை சிலர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாரதியார் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பாக புள்ளிமான் ஒன்று தலையில் பலத்த காயத்துடன் படுத்திருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து புள்ளிமானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் மான் யார் கையிலும் சிக்காமல் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தது. காலை 10 மணி ஆகிவிட்டதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு வனக்காப்பாளர் அருண்குமார், வனக் காவலர் செல்வராஜ் ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே மானைப் பிடித்தனர். பின்னர் அந்த மானுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக வாகனத்தில் ஏற்றி கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மான் பரிதாபமாக இறந்துவிட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த மானுக்கு 6 வயது இருக்கும். இந்த மான் நேற்று இரவு ஊருக்குள் புகுந்து சுற்றித் திரிந்துள்ளது. அப்போது நாய்கள் துரத்தி மானை கடித்துள்ளன. இதன் காரணமாகவே மானுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மானை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். ஆனால் செல்லும் வழியிலேயே மான் பரிதாபமாக இறந்து விட்டது' என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...