கோவை: சிக்கலான பிரசவம் ஏற்படாமல் தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றும் தலைமை நர்சுகள் 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை: சிக்கலான பிரசவம் ஏற்படாமல் தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றும் தலைமை நர்சுகள் 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தாய் - சேய் இறப்பை கட்டுப்படுத்தும் விதமாக சிக்கலான பிரசவத்திற்கு வாய்ப்புள்ள கர்ப்பிணிப் பெண்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்பட பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தலைமை நர்சுகளுக்கு சிக்கலான பிரசவங்களைக் கண்டறிதல் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து 83 ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றக்கூடிய தலைமை நர்சுகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 500 தலைமை நர்சுகளையும் 10 பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 9 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பிரிவுக்கு திங்கட்கிழமை பயிற்சி அளிக்கப்படும். இந்த பிரிவுகளிலும் பயிற்சியில் பங்கேற்காத நர்சுகளுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிகள் குறித்து சென்னையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு தாய்-சேய் நல அலுவலர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் தாய் - சேய் இறப்பை கட்டுப்படுத்தும் விதமாக சிக்கலான பிரசவத்திற்கு வாய்ப்புள்ள கர்ப்பிணிப் பெண்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்பட பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தலைமை நர்சுகளுக்கு சிக்கலான பிரசவங்களைக் கண்டறிதல் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து 83 ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றக்கூடிய தலைமை நர்சுகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 500 தலைமை நர்சுகளையும் 10 பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 9 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பிரிவுக்கு திங்கட்கிழமை பயிற்சி அளிக்கப்படும். இந்த பிரிவுகளிலும் பயிற்சியில் பங்கேற்காத நர்சுகளுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிகள் குறித்து சென்னையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு தாய்-சேய் நல அலுவலர் தெரிவித்தார்.