கோவை: சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த வீடு இடிந்து வாலிபர் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த அவரது தாய் கவலைக்கிடமாக உள்ளார்.
கோவை: சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த வீடு இடிந்து வாலிபர் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த அவரது தாய் கவலைக்கிடமாக உள்ளார்.
கோவை சித்தாபுதூர் ஹரிபுரத்தில் வசிப்பவர் சரஸ்வதி (வயது 55). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மூன்றாவது மகன் ராஜசேகருடன் (வயது 30) வசித்து வந்தார்.

இவர்கள் வசிக்கும் வீடு 40 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்த ஓட்டு வீடாகும். இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக பழமையான அந்த வீடு மேலும் பழுதடைந்தது. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள பழுதடைந்த 48 வீடுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் தங்க வேண்டாம் எனவும் அவர்கள் தங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மழை நின்று விட்டதால் அரசு ஏற்பாடு செய்த இடத்திற்கு யாரும் செல்லவில்லை எனத்தெரிகிறது.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் ராஜசேகர் மற்றும் அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் பலியானார். தலையில் காயம்பட்ட சரஸ்வதி கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சித்தாபுதூர் ஹரிபுரத்தில் வசிப்பவர் சரஸ்வதி (வயது 55). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மூன்றாவது மகன் ராஜசேகருடன் (வயது 30) வசித்து வந்தார்.
இவர்கள் வசிக்கும் வீடு 40 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்த ஓட்டு வீடாகும். இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக பழமையான அந்த வீடு மேலும் பழுதடைந்தது. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள பழுதடைந்த 48 வீடுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் தங்க வேண்டாம் எனவும் அவர்கள் தங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மழை நின்று விட்டதால் அரசு ஏற்பாடு செய்த இடத்திற்கு யாரும் செல்லவில்லை எனத்தெரிகிறது.
இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் ராஜசேகர் மற்றும் அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் பலியானார். தலையில் காயம்பட்ட சரஸ்வதி கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.