கோவை: கோவையில் 11-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவையில் 11-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்து படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவியை திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் செல்போனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம் (வயது 30), சிதம்பரத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 29) ஆகியோர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
இதையடுத்து வேளாங்கண்ணி பகுதியில் இருந்த மாணவியை போலீசார் மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். மாணவியிடம் விசாரித்தபோது ஏழுமலை, சண்முகம் ஆகியோர் தன்னை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மாணவியை அவர்கள் 2 பேரும் ஊட்டி, திருச்சி ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் செல்வபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 2 பேரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்து படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவியை திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் செல்போனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம் (வயது 30), சிதம்பரத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 29) ஆகியோர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
இதையடுத்து வேளாங்கண்ணி பகுதியில் இருந்த மாணவியை போலீசார் மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். மாணவியிடம் விசாரித்தபோது ஏழுமலை, சண்முகம் ஆகியோர் தன்னை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மாணவியை அவர்கள் 2 பேரும் ஊட்டி, திருச்சி ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் செல்வபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 2 பேரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.