திருப்பூர்: முதல்வரை வரவேற்க வைத்திருந்த வாழை மரம் சாலையில் சரிந்து விழுந்தது. இதன் கீழே இருசக்கர வாகனத்துடன் சிக்கியவரை பொதுமக்கள் மீட்டனர்.
திருப்பூர்: முதல்வரை வரவேற்க வைத்திருந்த வாழை மரம் சாலையில் சரிந்து விழுந்தது. இதன் கீழே இருசக்கர வாகனத்துடன் சிக்கியவரை பொதுமக்கள் மீட்டனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவரை வரவேற்கும்விதமாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையோரங்களில் அ.தி.மு.க. கொடி மற்றும் வாழைமரங்கள் சாலையோரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

அப்படி கட்டி வைக்கப்பட்டிருந்த வாழைகளில் குலைகளின் பாரம் தாங்காமல் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்தன. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் சிக்கிக் கொண்டார்.
உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சரிந்த வாழைமரங்களை தூக்கி அவரை மீட்டனர். இந்தக் காட்சிகளை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் படம் பிடித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளியில் பேசிவிட்டு சென்ற பிறகு அதுவரை காத்திருந்த பொதுமக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த வாழை மரங்களில் இருந்து வாழைத்தார்களை கைகளால் பறித்து எடுத்துச் சென்றனர்.

ஆளாளுக்கு வாழை மரத்தைப் பிடித்து தொங்கியபடி வாழைத்தார்களை எடுக்க போட்டி போட்டனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவரை வரவேற்கும்விதமாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையோரங்களில் அ.தி.மு.க. கொடி மற்றும் வாழைமரங்கள் சாலையோரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
அப்படி கட்டி வைக்கப்பட்டிருந்த வாழைகளில் குலைகளின் பாரம் தாங்காமல் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்தன. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் சிக்கிக் கொண்டார்.
உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சரிந்த வாழைமரங்களை தூக்கி அவரை மீட்டனர். இந்தக் காட்சிகளை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் படம் பிடித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளியில் பேசிவிட்டு சென்ற பிறகு அதுவரை காத்திருந்த பொதுமக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த வாழை மரங்களில் இருந்து வாழைத்தார்களை கைகளால் பறித்து எடுத்துச் சென்றனர்.
ஆளாளுக்கு வாழை மரத்தைப் பிடித்து தொங்கியபடி வாழைத்தார்களை எடுக்க போட்டி போட்டனர்.