நீலகிரி: கொலக்கம்பை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
நீலகிரி: கொலக்கம்பை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை கிரேக்மோர் எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக் பகத் (வயது 27). ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது வீடு பூட்டிக்கிடப்பதால் சந்தேகமாக இருப்பதாக அருகில் குடியிருப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு திறந்திருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அசோக் பகத்தின் மனைவி சுமதி குமாரி (வயது 24) கழுத்து அறுபட்டநிலையில் இறந்து கிடந்தார், இவர்களது உடல் அருகே அசோக் பகத் எழுதி வைத்த கடிதம் ஒன்று காணப்பட்டது. அதில் கடந்த 21.12.2020 முதல் அதே குடியிருப்புப் பகுதியில் லட்சுமணன் மகளான பிரீத்திகுமாரி (வயது 8) என்பவர் காணாமல்போனதாகவும், அருகில் குடியிருப்பவர்கள் இவர்களிடம் சந்தேகப்பட்டு விசாரித்ததால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
பிறகு அசோக் பகத்தின் குழந்தைகளைத் தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள சிறிய தண்ணீர் தொட்டியில் ரேஷ்மா (வயது 4) என்ற பெண் குழந்தை தலையில் தாக்கப்பட்ட நிலையில் தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்தார். பிறகு அதே குடியிருப்பில் இளஞ்சியம் என்பவர் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த வீட்டின் பின்புறம் ஜன்னல் வழியாக நுழைந்து வீட்டின் முற்றத்தில் அசோக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதே அறையில் அவரது மகன் அபை (வயது 8) என்பவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இது சம்பந்தமாக கொலக்கொம்பை போலீசார் வழக்கு பதிந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை கிரேக்மோர் எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக் பகத் (வயது 27). ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது வீடு பூட்டிக்கிடப்பதால் சந்தேகமாக இருப்பதாக அருகில் குடியிருப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு திறந்திருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அசோக் பகத்தின் மனைவி சுமதி குமாரி (வயது 24) கழுத்து அறுபட்டநிலையில் இறந்து கிடந்தார், இவர்களது உடல் அருகே அசோக் பகத் எழுதி வைத்த கடிதம் ஒன்று காணப்பட்டது. அதில் கடந்த 21.12.2020 முதல் அதே குடியிருப்புப் பகுதியில் லட்சுமணன் மகளான பிரீத்திகுமாரி (வயது 8) என்பவர் காணாமல்போனதாகவும், அருகில் குடியிருப்பவர்கள் இவர்களிடம் சந்தேகப்பட்டு விசாரித்ததால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
பிறகு அசோக் பகத்தின் குழந்தைகளைத் தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள சிறிய தண்ணீர் தொட்டியில் ரேஷ்மா (வயது 4) என்ற பெண் குழந்தை தலையில் தாக்கப்பட்ட நிலையில் தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்தார். பிறகு அதே குடியிருப்பில் இளஞ்சியம் என்பவர் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த வீட்டின் பின்புறம் ஜன்னல் வழியாக நுழைந்து வீட்டின் முற்றத்தில் அசோக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதே அறையில் அவரது மகன் அபை (வயது 8) என்பவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது சம்பந்தமாக கொலக்கொம்பை போலீசார் வழக்கு பதிந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.